தமிழின் பல எழுத்தாளர்களுக்கு நல்ல புகைப்படங்களே இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் பெயர் மட்டும் அறிமுகம் ஆகியிருந்த சமயம், அவர் எப்படி இருப்பார் என்று அறியும் ஆவலில் புகைப்படங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். அவரைப் பற்றிய தகவல்களே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சமயத்தில் புகைப்படங்களைத் தேடுவது பேராசை என்று தோன்றியது. அந்த சமயத்தில் மாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த இரண்டு புகைப்படங்களில் ராஜு இருந்தார். இப்போது வரை நமக்கு கிடைக்கும் ராஜுவின் புகைப்படம் என்பது அவை இரண்டும்தான். ‘அலிடாலியா’ ராஜாமணியின் சேகரிப்பில் இருந்த ‘சாவி’ இதழின் அட்டைப்படம் ஒன்றில் வெளியாகியிருந்த படம் அட்டகாசமான ஒன்று!
தொடர்புடைய பதிவுகள்: