ஈரோடு கொண்டாடிய ‘என்றும் தமிழர் தலைவர்’

தந்தை பெரியார் பிறந்த மண்ணாகிய ஈரோட்டில், ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலின் அறிமுக விழா மார்ச் 2 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பான நடைபெற்றது. சமூக நீதிக் கூட்டமைப்பு & புதுமலர் பதிப்பகம் மூலம் ‘புதுமலர்’ ஆசிரியர் கண. குறிஞ்சி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, இந்நூலுக்குத் தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே நடைபெறும் முதல் கூட்டமாக அமைந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற …